Interview with Swami Chinmayananda, translated into Thamizh
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWvVmrOi2n0tWKhRbayZY2Z5NuMrQVVw8jazKrt4EsjCsaT38jzX5s0zK5zi4aq8wBF6h0qouLucBVlkGIsHgvJ7r6DsecPWuPhYS53oI04Cc7v74KswUBpm-NMQFINOBlSXrMWLLvQI8/s200/download+%25281%2529.jpg)
குருதேவருடன் பத்திரிக்கையாளர் டேவிட் ஸ்நோ நடத்திய பேட்டி University of Sandiego, Sandiego CA 1992 இல் பல்கலைகழக சுற்றுப்பயணத்தின் போது கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் கார்டியன் பத்திரிக்கையாளருக்குக் கொடுத்த பேட்டியின் சில பகுதிகள் இங்கே. மொழிப்பெயர்த்தவர் - Dr. S.வத்ஸலா, Chinmaya Gardens, Coimbatore டேவிட் ஸ்நோ : இந்த உரையாடலை நான் ஒலிப்பதிவு செய்யலாமா ? சுவாமி சின்மயாநந்தர் : நான் எதையும் ரகசியமாக சொல்வதில்லை . டேவிட் ஸ்நோ : உங்களுடைய புத்தகங்களில் நீங்கள் கற்றுத்தரும் கருத்துக்கள் மற்ற எல்லா உலக மதங்களையும் வெகுவாக மதிக்க கற்றுத்தரும் என்று குறிப்பிடுகிறீர்கள் . அது எப்படி ? சுவாமி சின்மயாநந்தர் : ஏனெனில் பேதங்கள் என்பது, கடைபிடிக்கும் சடங்குகளிலும் தொழுகைக்கென கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களின் அமைப்பிலும்தான் இருக்கின்றன . ஒரு கோவில் போல, சர்ச் இருப்பது இல்லை . சர்ச் போல மசூதி கட்டப்படுவதில்லை . முல்லா , பாதிரியார் போல இல்லை ; பண்டிதர் இவர்களிருவ ரைப் போலிருப்பதைல்லை . சடங்குகளும் தொழுகைக்கென அமைக்கும் இடமும் வேறுபட்டாலும் , தொழுகைக்கென்று ஓர் இ