alagu il avuNarai Thiruppugazh அலகு இல் அவுணரை திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அலகுஇல் அவுணரை (மதுரை) முருகா! உம்மையே நினைந்து உருகும் அன்பை அடியேனுக்குத் தந்து அருள் புரிவீர். தனதன தனனத் தந்த தானன தனதன தனனத் தந்த தானன தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான அலகில வுணரைக் கொன்ற தோளென மலைதொளை யுருவச் சென்ற வேலென அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டரீக அடியென முடியிற் கொண்ட கூதள மெனவன சரியைக் கொண்ட மார்பென அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ கலகல கலெனக் கண்ட பேரொடு சிலுகிடு சமயப் பங்க வாதிகள் கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங் கலைகளு மொழியப் பஞ்ச பூதமு மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென் இலகுக டலைகற் கண்டு தேனொடு மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன் இனிமையி னுகருற் றெம்பி ரானொரு .......கொம்பினாலே எழுதென மொழியப் பண்டு பாரதம் வடகன சிகரச் செம்பொன் மேருவில் எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ வலம்வரு மளவிற் சண்ட மாருத விசையினும் விசையுற் றெண்டி சாமுக மகிதல மடையக் கண