Thiruppugazh #144 vachana miga
பழநியப்பா!
ஆறெழுத்தை அன்புடன் ஓதி,
இம்மை அம்மை நலன்களை எய்த அருள்.
கருத்துரை
மெய்ஞ்ஞான சொரூபியே!
ஆறெழுத்தை அன்புடன் ஓதி,
இம்மை அம்மை நலன்களை எய்த அருள்.
வசனமிக வேற்றி ...... மறவாதே
மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
மெய்ஞ்ஞான சொரூபியே!
பழநியாண்டவரே!
அசுரகுலகால!
அமரர் சிறை மீட்ட பெருமாளே!
அடியேனுடைய மனது துன்பக்கடலில் விழாவண்ணம்,
தேவரீரை மறவாமல் சடக்கர மந்திரத்தை விதிப்படி ஜெபிக்கச் செய்து,
இகபர வாழ்வை வழங்கி அருள்வீர்.
4 வரி பாடல் என்றால் 3 பாடல் களைப் போடலாமே. முருகனை அதிக அளவில் நினைக்கலாம்
ReplyDeleteHari Om ji. Very glad to know your interest on Lord Muruga and Thiruppugazh.
DeleteThis song is also 8 lines only.
Each post has only 1 song, along with the explanation video link.
To see other songs, please click the "TAG" at the bottom of the post i.e. the "Thiruppugazh" link. Thank you