Thiruppugazh #153 muthu therikka
முத்துத் தெறிக்க (திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
உன்னை நினைந்து வருந்தும் இந்தத் தலைவி முன்
இன்றே திருத்தணிகையில் வந்து அருள்.
திருத்தணிகை வேலா!
உன்னை நினைந்து வருந்தும் இந்தத் தலைவி முன்
இன்றே திருத்தணிகையில் வந்து அருள்.
முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்
முட்டத்தொ டுத்த ...... மலராலே
முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென
முற்பட்டெ றிக்கு ......நிலவாலே
எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி
இப்பொற்கொ டிச்சி ...... தளராதே
எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்
இற்றைத்தி னத்தில் ...... வரவேணும்
மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர
வெற்பைத்தொ ளைத்த ...... கதிர்வேலா
மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி
மிக்குப்ப ணைத்த ...... மணிமார்பா
மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்
சித்தத்தில் வைத்த ...... கழலோனே
வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை
வெட்டித்து ணித்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முத்துத் தெறிக்க வளர் இக்குச் சிலைக்கை மதன்
முட்டத் தொடுத்த ...... மலராலே,
முத்தத் திருச்சலதி முற்றத்து உதித் தி என
முற்பட்டு எறிக்கும் ......நிலவாலே,
எத் தத்தையர்க்கும் இதமிக்குப் பெருக்கம் அணி
இப்பொன் கொடிச்சி ...... தளராதே,
எத்திக்கும் உற்ற புகழ் வெற்றித் திருத்தணியில்
இற்றைத் தினத்தில் ...... வரவேணும்,
மெத்தச் சினத்து வட திக்குக் குலச் சிகர
வெற்பைத் தொளைத்த ...... கதிர்வேலா!
மெச்சிக் குறத்தி தனம் இச்சித்து, அணைத்து, உருகி
மிக்குப் பணைத்த ...... மணிமார்பா!
மத்த ப்ரமத்தர் அணி மத்தச் சடைப் பரமர்
சித்தத்தில் வைத்த ...... கழலோனே!
வட்டத் திரைக் கடலில் மட்டித்து எதிர்த்தவரை
வெட்டித் துணித்த ...... பெருமாளே.
Comments
Post a Comment