Thiruppugazh #152 Thimira udhadhi
திமிர உததி (பழநி)
திருப்பழநி ஆண்டவரே!
அடியேனுக்கு மறுபிறப்பு இருந்தால்,
செவிடு, குருடு, அங்க ஈனம், வறுமை வேண்டாம்;
சீரிய தேவசரீரம், சீரியகுலம், மெய்யறிவு, நிறைவு
இவற்றைத் தந்தருள்வீர்.
திருப்பழநி ஆண்டவரே!
அடியேனுக்கு மறுபிறப்பு இருந்தால்,
செவிடு, குருடு, அங்க ஈனம், வறுமை வேண்டாம்;
சீரிய தேவசரீரம், சீரியகுலம், மெய்யறிவு, நிறைவு
இவற்றைத் தந்தருள்வீர்.
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள ...... மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் ...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் ...... பெருமாளே
பதம் பிரித்தல்
திமிர உததி அனைய நரக
செனனம் அதனில் ...... விடுவாயேல்,
செவிடு, குருடு, வடிவு குறைவு,
சிறிது மிடியும் ...... அணுகாதே,
அமரர் வடிவும், அதிக குலமும்,
அறிவும் நிறையும் ...... வரவேநின்,
அருளது அருளி எனையும் மனதொடு
அடிமை கொளவும் ...... வரவேணும்.
சமர முகவெல் அசுரர் தமது
தலைகள் உருள ...... மிகவே, நீள்
சலதி அலற, நெடிய பதலை
தகர, அயிலை ...... விடுவோனே!
வெமர அணையில் இனிது துயிலும்
விழிகள் நளினன் ...... மருகோனே!
மிடறு கரியர் குமர! பழநி
விரவும் அமரர் ...... பெருமாளே.
Comments
Post a Comment