Thirupugazh #138 kaitharuna jothi
கைத்தருண சோதி (சிதம்பரம்)
சிதம்பர முருகா!
எல்லாமும் நீயே.
சிதம்பர முருகா!
எல்லாமும் நீயே.
கைத்தருண சோதி யத்திமுக வேத
கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண்
கற்புசிவ காமி நித்யகலி யாணி
கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண்
வித்துருப ராம ருக்குமரு கான
வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண்
வெற்புளக டாக முட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண்
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
திக்கினினி லாதப் ...... பெருமாள்காண்
தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
சித்திரகு மாரப் ...... பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண்
துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே
----------------------------------------------
பதம் பிரித்தல்
----------------------------------------------
கை தருண சோதி அத்தி முக வேத
கற்பக சகோத்ரப் ...... பெருமாள்காண்!
கற்பு சிவகாமி நித்ய கலியாணி
கத்தர் குருநாதப் ...... பெருமாள்காண்!
வித்து ருப ராமருக்கு மருகு ஆன
வெற்றி அயில் பாணிப் ...... பெருமாள்காண்!
வெற்புஉள கடாகம் உட்க, உதிர வீசு
வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண்!
சித்ரமுகம் ஆறு முத்தும் அணி மார்பு
திக்கினின் இலாதப் ...... பெருமாள்காண்!
தித்திமிதி தீதென ஒத்தி விளையாடு
சித்திர குமாரப் ...... பெருமாள்காண்!
சுத்த விர சூரர் பட்டுவிழ, வேலை
தொட்ட கவி ராஜப் ...... பெருமாள்காண்!
துப்பு வளியோடும் அப் புலியுர் மேவு
சுத்த சிவஞானப் ...... பெருமாளே.
Comments
Post a Comment